தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

தொலைத்தொடர்புத்துறையில் திறமையான ஆட்களை உருவாக்கவும், பயிற்சி அளிக்கும் விதமாகவும் கோவையில் இதற்கான ஒரு மையத்தை ஏற்படுத்த தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கோவையில் திறன் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக, துவங்கப்படவுள்ள இந்த மையத்தில், தொலைத்தொடர்புத்துறை அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்)தொழில்நுட்பம், ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு முறைகள், வலைத்தொடர்பு மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை திறன் மேம்பாடு, பழுதுநீக்கல் உள்ளிட்ட அணைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்த மையம் அரசின் நோக்கமான டிஜிட்டல் இண்டியா, மேக் இன் இண்டியா திட்டத்துக்கு உதவும் வகையில் பயிற்சி அளிக்கும். 



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எஸ்.பி கோச்சர் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ருத்திரமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.



பின்னர், பேசிய தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி:- தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, தொழில்துறையை அடையவும் அனைவரின் நோக்கமான திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாக கொண்டது. இவ்விரு நிறுவனங்களும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு, மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு திறனை இளைஞர்களுக்கு அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தரும். நாடு முழுவதும் தொலைத்தொடர்புத்துறை திறனை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். எவரெஸ்ட் சிகரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க சிறப்பான பயிற்சியை இந்த மையம் அளிக்கும். அடுத்த இந்து ஆண்டுகளில் 8.67 மில்லியன் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சியை கொண்டு செல்ல ஆன் லைன் மற்றும் ஆப் லைன் முறையை கையாள உள்ளோம். அதிநவீன தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையிலும் தயார் நிலை பயிற்சியாக இம்மையம் இருக்கும் என அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...