பேரூர் குளக்கரையில் ஆக்கிரமிப்பா? அதிகாரிகள் விசாரணை


கோவை மாவட்டத்தில் 28 குளங்கள் உள்ளன. அதில் 10 குளங்கள் மாநகராட்சி வசம் உள்ளன. மீதம் உள்ளவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.  அதில் ஒன்று பேரூர் குளம். நொய்யல் நதிக்கரையை அடுத்த  புட்டு விக்கி பாலத்தின் அருகே அமைந்துள்ளது இந்த பேரூர் குளம்.கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக இப்பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 10 குடும்பங்கள் குளத்தின் கரைப்பகுதியில் கூடாரம் அமைத்து குடிபுகுந்துள்ளனர். 



மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள இந்திய இராணுவ முகாமில் குழாய் பதிக்கும் பணிக்காக கோவை வந்ததாகவும், ஒரு மாத காலத்தில் ஆந்திராவுக்கு திரும்ப இருப்பதாகவும் அப்பகுதியில் முகாமிட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். 

இது குறித்து பொதுபணித்துறை அதிகாரி ஒருவர்  கூறுகையில், 'ஆந்திர மக்கள் பேரூர் குளக்கரையில் கூடாரம் அமைத்திருப்பது தொடர்பான விவரம் எங்களுக்கு தெரியவில்லை. தற்காலிக பணி நிமித்தமாக அந்த மக்கள் குளக்கரையில் குடிபுகுந்திருக்கலம். உடனடியாக இது குறித்து விசாரணை நடத்துகிறோம். அவ்வாறு அவர்கள் இராணுவ பணி காரணமாக அங்கு குடியமர்த்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து  அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்' என்றார். 



மழைக்காலம் என்பதால் இப்பகுதியில் உள்ள குளம் நிரம்பும் வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குளத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பது சிறந்தது.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...