தேசிய விருதுபெரும் பத்திரிகையாளர் செல்வகுமாருக்கு பாராட்டு விழா

சிறப்பான கட்டுரைகள் எழுதும் செய்தியாளர்களுக்கு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் ஆண்டு தோறும் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தினமலர் கோவை பதிப்பின் முதன்மை நிருபர் செல்வகுமார் எழுதிய ‘ஒரு நதியைத் தேடி’ என்னும் தொடர் கட்டுரையைப் பாராட்டி வரும் 16ம் தேதியன்று தில்லியில் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.



இதற்காக தற்போது ஒட்டுமொத்த தமிழக ஊடகத்துறையும் செல்வகுமாரைக் கொண்டாடி வருகின்றது. அதன் ஒருபகுதியாக, கோவை பத்திரிகையாளர்கள் இணைந்து தேசிய விருதுபெற உள்ள செல்வகுமார்-க்கு, ரயில் நிலையம் அருகே உள்ள மண்டபம் ஒன்றில் பாராட்டு விழா நடத்தினர். இதில் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு செல்வகுமாரை வாழ்த்திப் பேசினர்.

இதைத்தொடர்ந்து, இவ்விழாவில் செல்வகுமார் பேசுகையில், ''காமராஜர் காலத்தில் தொழில்நுட்பம் அதிகமாக இல்லை, ஆனால் பரம்பிக்குளம் உள்ளிட்ட பல அணைகளை கட்டினார். இது மிகவும் பிரம்மிக்கத்தக்கது. இதை அடிப்படையாகக் கொண்டு நீர்பாசன முறையை மேம்படுத்த பல தொடர் கட்டுரைகளை எழுதினோம். மரக்கடத்தல், சூழல் குறித்த கட்டுரைகள் எழுதும் போது மிரட்டல்கள் வந்தன. அவற்றைக் கடந்து செய்திகள் வெளியிட்டோம். அதன் எதிரொளியாக பலர் கைது செய்யப்பட்டனர். இதை நான் தான் செய்யமுடியும் என்பது இல்லை. செய்தியாளர்கள் அனைவரும் செய்யமுடியும். நம்மால் முடியாது என்ற எண்ணத்தை கைவிடுங்கள். இந்த விருதுக்காக என்னை கவுரவித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து நான் உங்களோடு பயனிக்க வேண்டும்'' என அவர் பேசினார்.



இதனைத்தொடர்ந்து, இளம் பத்திரிகையாளர்கள் அவருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...