அரசுப் பேருந்து மோதி பெண் பலி

கோவை பாலக்காடு மெயின் ரோடு பகுதியில் உணவு விடுதி நடத்தி வருபவர் முனிராஜ். இவரது மனைவி புவனேஷ்வரி. செவ்வாயன்று (இன்று) காலை பொருட்கள் வாங்குவதற்காக புவனேஷ்வரி, தனது அண்ணன் மகன் மோகன்தாஸுடன் இரு சக்கர வாகனத்தில் குனியமுத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இவர்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி புவனேஷ்வரி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் பின் சக்கரம் இவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மீது மேற்கு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் அரசு பேருந்து மோதி பெண் இறந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''மாநகராட்சியின் சார்பில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அதிவேகமாக வரும் வாகனங்களால் இவ்வாறான விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகிறது. இதுகுறித்து, காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்றனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...