ஓய்வூதியம் கோரி கட்டிடத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் அமைப்புசாரா கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் கேட்டு திருச்சி சாலையிலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்திருந்த 60 வயது நிறைவடைந்த கட்டுமான தொழிலாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அவர்களின் மனுவை மறு பரிசீலனை செய்யக் கோரியும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 



இதில், கட்டிட தொழிலாளர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நலவாரிய அதிகாரியிடம் அளித்தனர். மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதியளிக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...