வால்பாறை குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

வால்பாறை பகுதியில் சில மாதங்களாக மழையின்றி வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரகாலமாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் அடர்ந்த வனப்பகுதியில் வறட்சி நிலை இன்னும் சீராகாததால் யானைக் கூட்டம் உணவு மற்றும் தண்ணீருக்காக பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து சேதம் செய்து வருகின்றது. 

இந்நிலையில், வால்பாறைக்கு உட்பட்ட காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானைக் கூட்டம் அப்பகுதியில் இருந்த ரேஷன் கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அரிசி மூட்டையை இழுத்து சேதம் செய்ததுடன் அப்பகுதியிலேயே தற்போது முகாமிட்டுள்ளது. 



அதேப்போல், கருமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட மேலாளரான தில்லை என்பவரின் வீட்டின் கதவை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்தக் காட்டுயானையை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். 

மேலும், பன்னிமேடு, வாகமலை, சோலையார், அக்காமலை, சிறுகுன்றா உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அக்காமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...