பழங்குடியினரின் இடத்தை ஆக்கிரமித்த ஈஷா- உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் இயக்கத்தினர் கைது



கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 44 ஏக்கர் நிலங்களை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக் கோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1971ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கோவை முட்டத்துவயல் பகுதியில் முத்துச்சாமி (அ) அமெரிக்க கவுண்டர் என்பவரால் பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 44 ஏக்கர் நிலம் பட்டா செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.



இதைத்தொடர்ந்து, ஈஷா அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் குடியேறும் போராட்டம் வெள்ளியன்று (இன்று) நடைபெற்றது.



கோவை இருட்டுப்பள்ளம் பகுதியில் இருந்து பேரணியாக வந்த அவ்வமைப்பினரை செம்மேடு பகுதியின் முன்பாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து, தமிழ்புலிகள் அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் முகிலரசன் கூறுகையில், முதற்கட்டமாக குடியேறும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி ஈஷா அமைத்துள்ள வேலிகளை பிடுங்கி எறியும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ்புலிகள் அமைப்பினர் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...