மத்திய அரசின் மலிவு விலை மருந்துக் கடை- மக்கள் மகிழ்ச்சி


மத்திய அரசின் ''ஜன் அவுஷதி'' திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள மலிவு விலை மருந்துக் கடைகளினால் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதைத் தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மக்கள் அதிகம் உபயோகிக்கக் கூடிய மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அத்யாவசிய முக்கிய மருந்துகளின் விலையில் கட்டுப்பாட்டினைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பகுதிகளில் ஜன் அவுஷதி மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 



இந்த மருந்துக் கடைகளில் சுமார் 400, 500 ரூபாய்க்கு தனியார் அல்லது வெளிக்கடைகளில் வாங்கப்படும் மருந்துகள் இந்த ஜன் அவுஷத் மருந்தகத்தில் வெறும் 40 முதல் 50 ரூபாய்க்கே கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 



இத்திட்டத்தின் கீழ் கோவை இராமநாதபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மருந்தகத்தின் உரிமையாளர் கூறுகையில், ''தனியார் மருந்துக் கடைகளில் மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இனி மக்களுக்கு இல்லை. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது'' என்றார்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...