உத்தரகண்டில் ஜீப் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 பெண்கள் உள்பட 7 பேர் பலி

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஜீப் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள், சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர்.

உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள லாசி கிராமத்தை சேர்ந்த 11 பேர் ஜீப் ஒன்றில் பவ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பைஜ்ரோ கிராமத்திற்கு சென்றனர்.

அவர்கள் பைஜ்ரோவில் இருந்து ஜீப் மூலம் வீடு திரும்பினர். மலைப்பகுதியில் வந்த ஜீப் தலிசைன் பிளாக்கில் மதியம் 1 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பெண்கள், சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர், 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பைஜ்ரோ மற்றும் காஷிபூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...