உத்தரகண்டில் ஜீப் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 பெண்கள் உள்பட 7 பேர் பலி

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஜீப் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள், சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர்.

உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள லாசி கிராமத்தை சேர்ந்த 11 பேர் ஜீப் ஒன்றில் பவ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பைஜ்ரோ கிராமத்திற்கு சென்றனர்.

அவர்கள் பைஜ்ரோவில் இருந்து ஜீப் மூலம் வீடு திரும்பினர். மலைப்பகுதியில் வந்த ஜீப் தலிசைன் பிளாக்கில் மதியம் 1 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பெண்கள், சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர், 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பைஜ்ரோ மற்றும் காஷிபூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...