சிறுவாணி அணை விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

''சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது 

வரவேற்கத்தக்கது. கேரள அரசு மீண்டும் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் முயற்சி மேற்கொள்ளுமானால் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு தைல மரங்கள் நட டி.என்.பி.எல் காகித நிறுவனம் முயற்சித்துவருவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முயற்சி கைவிடப்பட வேண்டும். இம்முயற்சி தொடருமானால் மக்களை திரட்டி தனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.

மேலும், கேரளாவில் இருந்து கோவைக்குள் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைத்து எல்லைச் சாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் நட்பின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும்'' என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...