பள்ளி மாணவன் உட்பட இருவர் மாயம்

கோவை மாவட்டம், ராயப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் லோகவாணி (18). இவர் செவ்வாயன்று காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். பின் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகாலட்சுமி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி. இவருக்கு முருகேசன் மற்றும் ராஜேந்திரன் (32) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராஜேந்திரனுக்கு கடந்த 6 மாதம் முன்பு ஜானகி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற ராஜேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து, அவரது அண்ணன் முருகேசன் பெரியநாயக்கன்பாளைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேப்போன்று ஆனைமலைப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், பிரியா தம்பதியரின் மகன் தன்ராஜ் (14). விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று காலை விடுதி காப்பாளர் தன்ராஜின் அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லாததைக் கண்டு பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆனைமலை காவல் நிலையத்தில் பிரியா புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...