கப்பல் உடைக்கும் தளத்தில் வெடிவிபத்து: பாகிஸ்தானில் 10 தொழிலாளர்கள் சாவு

பாகிஸ்தானில் கப்பல் உடைக்கும் தளத்தில் பழைய எண்ணெய்க் கப்பலை உடைக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்துத் தகவல் இல்லை.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், கடானி நகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் பயன்படுத்தப்படாத பழைய சரக்குக் கப்பலை உடைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீச்சுவாலை மூலம் இரும்பை உருக்கி வெட்டும் "வெல்டிங்' முறையில் கப்பல் உடைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்த எண்ணெய்க் கப்பலில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

கப்பலின் பகுதிகள் தொடர்ந்து பல முறை வெடித்துச் சிதறியதில் அந்தக் கப்பல் முழுவதும் தீப்பிடித்தது.

இதில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், கப்பலுக்குள் சிக்கியுள்ள சுமார் 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை.

கொழுந்து விட்டு எரியும் எண்ணெய்க் கப்பலில் மேலும் வெடிவிபத்து ஏற்படலாம் என்பதால், மீட்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த அனைவரும் கராச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் மம்னூன் ஹுசைனும், பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...