கூடுதல் கட்டணம் வசூலித்த வாகன நிறுத்தத்தின் உரிமம் ரத்து


கோவை, ராஜா வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தகம் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த முறையில் செயல்படும் இந்த வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துவந்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், அதிகாரிகளை அங்கு சோதனைக்காக அனுப்பினார். இதில், அந்த வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த வாகன நிறுத்தத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

பொதுமக்களை வஞ்சித்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வாகன நிறுத்தத்திற்கு எச்சரிக்கை, அபராதம், ஒப்பந்தத்திற்கு இடைக்காலத் தடை என எதுவும் விதிக்காமல் நேரிடையாக ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...