தினத்தந்திக்கு வயது 75..! தமிழ்நாடுக்கு வயது 60..!

தினத்தந்தி தொடங்கப்பட்டு இன்று 75 ஆண்டுகளுடன் பவள விழா கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உதயமாகி இன்று 60வது ஆண்டுகள் ஆகிறது.

தினத்தந்தி பவள விழா:-

1942ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களால் முதன் முதலாக மதுரை மாநகரில் தினத்தந்தி தொடங்கப்பட்டது. அன்று முதல், தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்து விட்டது தினத்தந்தி. 'தந்தி' தொடங்கப்பட்டபோது, இரண்டாவது உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. போர்ச்செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கியது தந்தி. இந்தியாவிலும், அகில உலகிலும் அடுக்கடுக்காக எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வல்லரசு நாடுகளிலும், பிற நாடுகளிலும் பற்பல ஆட்சி மாற்றங்கள் நடந்தன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. இந்திய வரலாற்றிலும் பல திருப்பங்கள் ஏற்பட்டன.  நாள்தோறும் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளை, தமிழ் மக்களுக்கு சுடச்சுட தினத்தந்தி வழங்கியது.

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தலைமையில் இயங்கிய தினத்தந்தி தற்போது அவர் மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் தலைமையில் சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், தஞ்சை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, பெங்களூர், மும்பை என 16 பதிப்புகளில் தினமும் 16,79,837 பிரதிகளை விநியோகம் செய்து வருகிறது. 



இந்த நடப்பு ஆண்டிலும் 1,07,362, பிரதிகள் உயர்ந்து, 75 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது தினத் தந்தி!

தமிழ்நாடு மொழிவாரி மாநிலம்:-

மொழிவாரி மாநில அமைப்புகள், 1956 நவம்பர் 1ம் நாள் சட்டப்படி பிரிக்கப்பட்ட தனி மாநிலங்களாக அதிகாரம் பெற்றன. அதில் தமிழ்நாடு நவம்பர் 1ம் நாள் மொழிவாரி மாநிலம் பிரிந்து இன்றுடன் அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தமிழ்நாடு மொழிவாரி மாநிலங்களாக அமைய  காமராஜர், பெரியார், அண்ணா, ஜீவா, நேசமணி, சிலம்பு செல்வர், சங்கரலிங்கனார் போன்ற தலைவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்கள் மூலம் தமிழ்நாடு மொழிவாரி மாநிலங்களில் தமிழ்நாடு தனி மாநிலமாகவும்,  ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்துள்ளது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...