நலமுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள்


கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் வனத்துறை மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சாடிவயல் யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண் குட்டியை அது ஈன்றது. 

தொடர்ந்து தாய் மற்றும் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து வந்த வனத்துறை மருத்துவர்கள் அதனை வனப்பகுதிக்குள் விட்டனர். 

இதனைத்தொடர்ந்து அந்த இரு யானைகளையும் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது அந்த யானைகள் போரதி, முள்ளான்காடு வனப்பகுதியில் சுற்றிவருகிறது. பெண் காட்டு யானை தற்போது, வனத்தின் சூழலுக்கு ஏற்றாற்போல் தன் குட்டியை பராமறித்து வருகிறது. ஓரிரு நாட்களில் மற்ற யானைக் கூட்டத்துடன் இணைந்துவிடும். இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு அந்த தாய் மற்றும் குட்டி யானை வனத்துறையினரின் கண்காணிப்பிலேயே இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...