மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் அழகு நிலையம் நடத்திய சங்கீதா சர்மா (வயது 41) கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி மலேசியா சென்றார். அங்குள்ள பினாங் சர்வதேச விமான நிலையத்தில் இவரது உடமைகளை சோதித்த போது, அவர் வைத்திருந்த பெட்டியில் 1.6 கிலோ மெதாம்பெடமைன் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்கீதா சர்மாவை கைது செய்த அதிகாரிகள், அவர் மீது அபாயகரமான போதைப்பொருள் கடத்தல் தடுப்புச்சட்டம் 1952-ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுவோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

அதன்படி சங்கீதா மீதான வழக்கு விசாரணை பினாங் மாநிலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், சங்கீதா சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஆஷ்மி அரிபின் உத்தரவிட்டார்.

சங்கீதா மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் எந்தவித சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிபதி ஆஷ்மி, சங்கீதாவின் பெட்டியில் போதைப்பொருள் இருந்தது அவருக்கு ஏற்கனவே தெரியும் என்றும் கூறினார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையட்டி சங்கீதா சர்மா பினாங் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தீர்ப்பை விளக்கி கூறினார். அதை அமைதியாக கேட்டுக்கொண்ட சங்கீதா, பின்னர் கதறி அழுதார்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...