கோவையில் கேரள மருத்துவ கழிவுகள் - தொடர்புடையவர்களுக்கு நீதிமன்ற காவல்



கோவை மாவட்டம், எட்டிமடையைச் சேர்ந்தவர் விவசாயி செல்லப்பகவுண்டர் (75). அப்பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை கடந்த மாதம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இலியாஸ் (50) என்பவர் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் நிறுவனம் அமைப்பதாகக் கூறி குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனை கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாஜியும், சதிரும் நிர்வகித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனிடையே திங்களன்று அதிகப்படியான மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதிக்கு வந்த 24 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறித்து அப்பகுதிக்கு வந்த மதுக்கரை வட்டாட்சியர் சிவசங்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த லாரிகளில் கேரள மாநிலத்திற்கு உரிய கதிர்வீச்சு அபாயம் நிறைந்த மருத்துவக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் கொட்டிவைக்கப்பட்டிருந்ததும் மருத்துவக் கழிவுகள் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காவல் துறையினரும் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.




இந்நிலையில், இதுகுறித்தான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இச்சம்பவத்திற்கு தொடர்புடைய முகமது இலியாஸ், ஹாஜி, சதிர் மற்றும் நில உரிமையாளர் ஆகியோரை நவம்பர் 11ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

மேலும், நீதிமன்றத்தின் உரிய உத்தரவு கிடைத்தவுடன் எட்டிமடை பகுதியில் கொட்டிவைக்கப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை அகற்ற அவர்களது வழக்கறிஞர் அருள்சக்திக்கு உத்தரவிடப்பட்டது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...