ஒரே பகுதியில் பெண்களிடம் 13 சவரன் கொள்ளை

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (55). நேற்றுமுன்தினம் சூலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின், உறவினர்களுடன் எஸ்.எல்.பி.நகரில் உள்ள பூங்காவிற்கு சென்றுவிட்டு ராஜம்மாள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். 

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ராஜம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூலூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி ஆனந்தவள்ளி (35) செவ்வாயன்று அலுவலக வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ஆனந்தவள்ளியின் கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். இதனை தடுக்க முயற்றித்த ஆனந்தவள்ளி, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இந்நிலையில், அவர்களது வாகன எண்ணை மட்டும் ஆனந்தவள்ளி கவணித்துள்ளார். அந்த எண் TN 36 D 2333 ஆகும். இந்த வாகன எண்ணை ஆதாரமாகக் கொண்டு சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...