பேருந்தில் பிக்பேக்கட் - பொதுமக்கள் தர்ம அடி


கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). செவ்வாயன்று வேலைக்குச் செல்வதற்காக பீளமேட்டில் இருந்து பேருந்து ஏறியுள்ளார். ராதாகிருஷ்ணா மில் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது கோவிந்தராஜின் அருகில் நின்றிருந்த வாலிபர் அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை திருடிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனையறிந்த கோவிந்தராஜன் கூச்சலிடவே பயணிகள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து,  பீளமேடு காவல் நிலையத்தில் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு (40) என்பதும், இது போன்ற பல திருட்டுகளில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...