ஈராக்கில் 50 முன்னாள் போலீஸ் அதிகாரிகளை கொன்று குவித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் நகரை மீட்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பின்வாங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து மனிதகேடயமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மொசூல் நகரில் தங்கள் பிடியில் இருந்த 50 முன்னாள் போலீஸ் அதிகாரிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

ஈராக் ராணுவம் மொசூலை நெருங்கி சுற்றி வளைப்பதால் ஆத்திரம் அடைந்து அங்குள்ள மக்களை கொன்று குவிக்கின்றனர். மேலும் மொசூலில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள சபினா என்ற கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கு பொதுமக்கள் 15 பேரை சுட்டுக்கொன்று பிணங்களை ஆற்றில் வீசினர்.

அங்கு வாகனத்தில் வந்த 6 பேரின் கைகளை கட்டி கிராமம் முழுவதும் இழுத்து சென்றனர் துலோல் நசெர் என்ற கிராமத்தில் துப்பாக்கி சூடு காயங்களுடன் கூடிய 70 உடல்களை ஈராக் ராணுவம் கண்டுபிடித்தது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...