விவசாய நிலத்தில் குவிந்துகிடந்த உயிரினங்கள்- விசாரணை



கோவை மாவட்டம், துடியலூர் வட்டத்திற்கு உட்பட்டது பன்னிமடை பஞ்சாயத்து. இப்பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த விவசாய நிலத்தில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் கூறிவந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

அப்போது விவசாய நிலத்தில் சோதனையிட்டபோது, அங்கிருந்த ஒரு குழியில் பாம்பு மற்றும் மயில்கள் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர்.

இதில், அந்தக் குழியில் 2 பாம்புகள், 2 காடைகள், 1 காகம், 10 மயில்கள் இறந்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை இறந்து நீண்ட நாட்கள் ஆனதால் சேதமடைத்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனிடையே, ஒரே குழியில் 10 மயில் உட்பட பல உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் விவசாய நில உரிமையாளர் ராஜகோபாலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...