சர்க்கரை, பருப்பு, பலகாரமில்லாமல் தீபாவளிக் கொண்டாட்டம்- மாதர் சங்கம் நூதனப் போராட்டம்

தமிழக மக்கள் சர்க்கரையின்றி, பருப்பின்றி, பலகாரமின்றி பச்சைத் தண்ணியில் தீபாவளி கொண்டாட உள்ளனர் என மாதர் சங்கத்தினர் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ரேசன் கடைகளில் பருப்பு, சர்க்கரை, எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உள்ளூர் மக்களின் தேவையை சிறிதும் நினைக்காமல் மத்திய அரசு அதிகளவில் வெளிநாடுகளுக்கு இத்தகையப் பொருட்களை ஏற்றுமதி செய்ததே இதற்குக் காரணம். மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்காலிக முதல்வர் பொறுப்பில் உள்ள பன்னீர்செல்வமும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தாமல் செயல்பட்டு வருகிறார்.

உடனடியாக அமைச்சரவை கூடி தீபாவளிக்கு முன்பு ரேசன் கடைகளில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், வெறும் நீரில் தான் இந்த தீபாவளியை கொண்டாட நேரிடும் என மாதர் சங்க மாநில துணைத் தலைவர் அமிர்தம் தலைமையில் மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்திபுரம், காட்டூர் பகுதியில் உள்ள அனைத்திந்திய இளைஞர் பெறுமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதில், கோவை மாவட்ட மாதர் சங்க தலைவர் அமுதா, செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...