மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் தர்கா அறக்கட்டளை பதில்

‘‘மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி அளிக்கப்படும்’’ என்று சுப்ரீம் கோர்ட்டில் தர்கா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மும்பை ஒர்லி பகுதியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தர்கா, மும்பை நகரின் முக்கிய அடையாள சின்னமாக திகழ்கிறது. இந்த தர்காவுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த பெண்களுக்கு கடந்த 2012–ம் ஆண்டு முதல் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ஜாகியா சோமன் மற்றும் நூர்ஜகான் நியாஸ் ஆகிய இரண்டு பெண்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, ‘‘ஹாஜி அலி தர்காவிற்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் 14, 15, 19 மற்றும் 25 ஆகிய ஷரத்துகளுக்கு எதிரானது என்றும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதாக தர்கா அறக்கட்டளை விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு 6 வார காலம் இடைக்கால தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, ஹாஜி அலி தர்கா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு
வந்தபோது, ‘‘இந்த விவகாரத்தில் முற்போக்குத்தனமான நிலைப்பாட்டை தர்கா அறக்கட்டளை எடுக்கும்’’ என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அதேநேரத்தில், தர்காவுக்குள் பெண்கள் நுழைவதற்கு ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூத், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தர்கா அறக்கட்டளை தனது முந்தைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டது. ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்க தர்கா அறக்கட்டளை ஆர்வத்துடன் இருப்பதாக தர்கா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆண்களுக்கு சமமாக பெண்களும் தர்காவுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று வாதிட்ட வக்கீல் கோபால் சுப்பிரமணியம், இதற்கு தேவையான உள்கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், 4 வார காலம் அவகாசம் அளிக்குமாறு கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தர்கா அறக்கட்டளைக்கு கால அவகாசம் அளித்தனர். அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...