நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கக்கோரி- மனு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் சரிவர விநியோகம் செய்யக்கோரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து பருப்பு, பாமாயில், சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஒரு மாதத்தில் எந்தத் தேதியிலும் கேட்டாலும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய வேண்டும். என்று நாளிதழ்களிலும் மற்றும் ஊடகங்களில் தவறாமல் வெளிவருகிறது. ஆனால் நியாய விலைப்பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்திற்கு புகார்கள் வந்துள்ளது. 

இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தலைவர் கல்யாணசுந்தரம் பேசுகையில்:-
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் 5 கட்டமாக நியாய விலைக்கடைகளில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்கான முறையான திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் அடையாள சான்றிதழாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் அனைத்தும் சரியான முறைகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் நியாய விலைக்கடைகள் அவ்வாறு சரியான முறையில் செயல்படுவதில்லை. இதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாவிட்டால், அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு திருப்பி ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...