நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கக்கோரி- மனு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் சரிவர விநியோகம் செய்யக்கோரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து பருப்பு, பாமாயில், சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஒரு மாதத்தில் எந்தத் தேதியிலும் கேட்டாலும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய வேண்டும். என்று நாளிதழ்களிலும் மற்றும் ஊடகங்களில் தவறாமல் வெளிவருகிறது. ஆனால் நியாய விலைப்பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்திற்கு புகார்கள் வந்துள்ளது. 

இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தலைவர் கல்யாணசுந்தரம் பேசுகையில்:-
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் 5 கட்டமாக நியாய விலைக்கடைகளில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்கான முறையான திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் அடையாள சான்றிதழாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் அனைத்தும் சரியான முறைகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் நியாய விலைக்கடைகள் அவ்வாறு சரியான முறையில் செயல்படுவதில்லை. இதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாவிட்டால், அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு திருப்பி ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் 7வது தேசிய மினி பைக் பந்தயம் சிறப்பாக நடைபெற்றது

கோயம்புத்தூர் கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் மார்ச் 18 அன்று 7வது தேசிய அளவிலான மினி பைக் பந்தயம் RIVALS'26 நடைபெற்றத...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 23 நிலவரப்படி முழு விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, திருமூர்த்தி அ...

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...