205.5 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் முடிவு

சாவ் பாவ்லோ: இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனம் 205.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,379 கோடியை) அபராதமாக செலுத்த முடிவு செய்துள்ளது.

லஞ்சம்:

பிரேசில் நாட்டின் எம்ப்ரேயர் நிறுவனம் இந்தியா, டோம்னிக் குடியரசு, சவூதி அரேபியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற, கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை அமெரிக்க கோர்ட் (எஸ்.இ.சி.,) விசாரித்து வருகிறது.

விற்பனை:

இந்தியாவுடன் 3 விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2008ம் ஆண்டு எம்பயர் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ரூ.1,391 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்திய தரப்புக்கு ரூ.36 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் டோம்னிக் குடியரசு (8 விமானங்கள்), சவூதி அரேபியா (3 விமானங்கள்), மொசாம்பிக்(2 விமானங்கள்) விற்பனை செய்ததாகவும், அதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டு சுமார் ரூ.555 கோடி லாபம் அடைந்ததாகவும் எஸ்.இ.சி., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அபராதம்:

இந்நிலையில் எம்ப்ரேயர் நிறுவனத்துக்கு 205.5 மில்லியன் டாலர் அபராதத்தை எஸ்.இ.சி., விதித்தது. இந்த அபராதத் தொகையை செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக எஸ்.இ.சி. தெரிவித்துள்ளது.

எம்பயர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், இந்தியாவில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...