எட்டிமடையில் தொடரும் சுகாதார சீர்கேடு - மக்கள் ஆவேசம்!

கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை கேரளாவை சேர்ந்த ஷாஜி மற்றும் மைசூரை சேர்ந்த சதிர் ஆகியோர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அந்த இடத்தில் கழிவுப்பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் கழிவு பொருட்களை கொட்டுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் இன்று காலை கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றுக்கொண்டு 23 லாரிகள் எட்டிமடை பகுதிக்கு வந்துள்ளது. ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளால் கோபத்தில் இருந்த பொதுமக்கள் அந்த கழிவுப்பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த லாரிகளில் மருத்துவக்கழுவு, இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் கழிவு, பழைய துணிகள் என பல விதமான கழுவுகள் கலந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், சம்பவ இடத்தில் அதிமுகவை சேர்ந்த கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் மற்றும் மதுக்கரை வட்டாச்சியர் சிவசங்கர், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் கேரளாவில் இருந்து கழிவுகளை மொத்தமாக கொண்டுவந்து, அவற்றை தரம் பிரித்து விற்பனை செய்வதற்காக இந்த இடத்தை குடோனாக ஷாஜியும், சதிரும் பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.⁠⁠⁠⁠





Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...