4 லட்சம் மதிப்பிலான 15 சவரன் நகை கொள்ளை

கோவை கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (86). இவர் கடந்த 19ம் தேதியன்று செங்கோட்டையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். இந்நிலையில், 22ம் தேதியன்று காலை கோவையில் உள்ள அவரது வீட்டின் கதவு திறந்துகிடப்பதாக அக்கம் பக்கத்தினர் வீராசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, கோவைக்கு விரைந்த வீராசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 15 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது.

இதுகுறித்து, உடனடியாக சாய்பாபா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...