துப்புறவு பணியாளர்களின் வாரிசுகளுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்- தமிழ்புலிகள்


கோவை மாநகராட்சியில் பட்டதாரி இளைஞர்களை துப்புரவு பணி செய்ய ஆணை பிறப்பித்துள்ள நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களுக்கு உரிய வேலை வழங்கக் கோரியும் தமிழ்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.மார்க்ஸ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 



அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சியில் துப்புறவுப் பணி செய்து பணிக்காலத்தில் காலமான துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கி வருவது நடைமுறையில் உள்ளது. அந்த வாரிசுதாரர்கள் எந்த படிப்பு படித்திருந்தாலும் அவர்களுக்கு துப்புறவுப் பணி மட்டுமேதான் வழங்கப்படுகிறது. இந்தச் செயல் துப்புறவுப் பணியாளர்களின் குழந்தைகள் என்னதான் படித்தாலும் அவர்கள் அருந்ததியராக பிறந்ததால் துப்புறவுப் பணிதான் செய்ய முடிவும் என்று சுட்டிக்காட்டுவதாக உள்ளது. 

இந்தச் செயல் குலக்கல்வித் திட்டத்தை கோவை மாநகராட்சி பின்பற்றி வருவதாகக் கருதுகிறோம். இந்நிலையை மாற்றி கருணை அடிப்படையில் துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளை பணியில் சேர்க்கும் போது அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டும். 

மேலும், ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் துப்புறவுப் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த அலுவலக வேலையினை ஒதுக்கித் தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...