கோவையில் தொடரும் கொள்ளை- மிரளும் காவல் துறை


கோவையில் கடந்த சில தினங்களாக திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மர்ம நபர்களை பிடிப்பதில் காவல்துறையினர் திணரி வருகின்றனர்.

கோவை மாவட்டம், இருகூரை அடுத்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். தி இந்து தின நாளிதழில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று வார விடுமுறை என்பதால் தன் குடும்பத்துடன் வெளியூர்  சென்றுள்ளார். பின், திங்களன்று (இன்று) காலை அவர் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது.



இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் தடயங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் கடந்த சில தினங்களில் இதேப்போன்று ஏராளமான திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 23 நிலவரப்படி முழு விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, திருமூர்த்தி அ...

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...