ஆந்திரா-ஒடிசா எல்லையில் நடந்த என்கவுண்டரில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மால்கான்கிரி, ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் நடந்த என்கவுண்டரில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஆந்திர பிரதேசம் - ஒடிசா எல்லையில் இருமாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது மால்கான்கிரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவியில் இருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முகாம் மீது போலீஸ் படை தாக்குதல் நடத்தியது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கூட்டத்திற்கு கூடியிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் சுமார் 50-60 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கலந்துக் கொண்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று இரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் மூன்று ஏ.கே. 47 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ரகத்தை சேர்ந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மால்கான்கிரி மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். 

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசாரும் காயம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...