ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ரூ. 14.65 லட்சம் திருட்டு: ஊழியர்கள் இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கடந்த 2 மாதங்களில் சிறுகச் சிறுக ரூ. 14.65 லட்சத்தை திருடிச் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை, தாமரை நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 9-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (32). இவர், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஊழியர்களின் துணையுடன் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பி வந்தார். இந்நிலையில், ஆறுமுகத்திடம் பணிபுரியும் ஊழியர்கள் பணம் நிரம்பும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் குறைவாக இருப்பதாக அந்தந்த வங்கி மேலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

 இதையடுத்து திருவண்ணாமலை, களம்பூர், சேத்பட், கேட்டவரம்பாளையம், படவேடு, சந்தவாசல், பெரியகொழப்பலூர், துரிஞ்சாபுரம் பகுதிகளில் உள்ள ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இண்டிகேஷ் ஏடிஎம் மையங்களில் கடந்த சில மாதங்களாக நிரப்பப்பட்ட தொகையை வங்கி அதிகாரிகளுடன் இணைந்து தனியார் நிறுவன உரிமையாளர் ஆறுமுகம் ஆய்வு செய்தார்.

அப்போது, அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் குறைவாக நிரப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனது நிறுவனத்தில் பணிபுரியும் சேத்துப்பட்டை அடுத்த கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு (25), டில்லிபாபு (24) ஆகியோர் மீது ஆறுமுகத்துக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து இருவர் மீதும் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிந்து, வேலு, டில்லிபாபு ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்கனர்.

விசாரணையில், இருவரும் சேர்ந்து அவ்வப்போது சிறுகச் சிறுக மொத்தம் ரூ.14.65 லட்சத்தை திருடியது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக இந்த திருட்டில் ஈடுபட்டதை ஊழியர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனராம். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும்போதே குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரை பணத்தை திருடினார்களாம்.

இதுதவிர, தங்களின் ஆடம்பர செலவுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் காவலாளி இல்லாத ஏடிஎம் இயந்திரங்களுக்கு இருவரும் செல்வார்களாம். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பகுதியின் ரகசிய எண்ணை பயன்படுத்தி பணப்பெட்டியை திறப்பார்களாம். பின்னர், அதில் இருந்து தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் இயந்திரத்தை லாவகமாக பூட்டிவிட்டுச் செல்வார்களாம்.

இவ்வாறாக கடந்த 2 மாதங்களில் மொத்தம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரத்தை இருவரும் சேர்ந்து திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இதுவரை இவர்கள் திருடிய பணத்தை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...