திருச்சி பாரதிதாசன் பல்கலை. விழாவில் 40 மாணவ, மாணவியர் மயக்கம்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பாவேந்தர் பாரதிதாசன் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார். இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடனப்போட்டிகள் புதிய ஆடிட்டோரியத்தில் நடந்தது. 

இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனமாடினர். 

இந்த ஆடிட்டோரியத்தில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால் போட்டியில் நடனமாடிய மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கமடைந்து விழுந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடிட்டோரியம் அருகே குடிநீர் வசதி இல்லை. மேலும், முதலுதவி வசதி எதுவும் இல்லை. இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு மயக்கமடைந்த மாணவிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அரங்கில் காற்றோட்ட வசதி இல்லாததால் பார்வையாளர்களும் மூச்சுத் திணறினர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...