யானையைப் பார்த்து பீதி - முதாட்டி பலி

வால்பாறை, சிறுகுன்றா டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி ஈஸ்வரி (68). இருவரும் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் வெளிப்புறத்தில் சத்தம் கேட்டுள்ளது. ஈஸ்வரி வீட்டின் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துள்ளார். அப்போது வெளியில் இருந்த யானை ஒன்று பிளறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வால்பாறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஈஸ்வரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து யானைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் இந்நிலையில், தற்போது யானையால் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...