எஸ்.என்.ஆர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை

கோயமுத்தூர், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் IQAC சார்பில் "கல்வி மற்றும் நிர்வாகத் தரமேம்பாட்டுத் தணிக்கையின் சிக்கல்களும் சாவல்களும்" என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை தேசிய தர மதிப்பீட்டு குழுவின் நிதிநல்கையின் கீழ் 21.10.2016 மற்றும் 22.10.16 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 

இந்நிகழ்வை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் முதல்வர் கருணாகரன் தலைமை ஏற்க, கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முத்துசாமி தொடங்கிவைத்து உரையாற்றினார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் சிறப்புரை நல்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சார்ந்த துறைசார் வல்லுநர்கள் பயன்பெறும் வகையிலான கருத்துக்களையும் பயிற்சியையும் வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பல்வேறு துறைப் பேராசிரியர்கள், எஸ்.என்.ஆர். கல்லூரி பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். இந்நிகழ்வினை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...