கோவை ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இயக்குநர் குழுக் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையருமான பிரகாஷ் தலைமையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான இயக்குநர் குழுக் கூட்டம் இன்று (21.10.2016) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளுடன் செயலாக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெலலிதா அறிவித்த சிறப்பு அறிவிப்பு திட்டங்களான  சங்கனூர்பள்ளம் சீரமைப்புப்பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம், வெள்ளளுர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் குறித்தும், மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடங்களை, அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல் போன்ற திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

இதற்கு முன்னர் நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மற்றும் டவுன் ஹால் பெரிய கடை வீதி ஆகிய மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடங்களை ஆய்வு செய்தார். மேலும், சங்கனூர்பள்ளம் கால்வாய் சீரமைப்புப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களான மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு டெக்ஸ்டூல் பிரிட்ஜ், அவினாசி ரோடு மற்றும் திருச்சி ரோடு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சக ஒருங்கிணைந்த நிதி கோட்ட இயக்குநர் மஜும்தார், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...