பாதுகாப்பு இல்லாத கழிப்பிடம் மக்கள் அவதி

கோவை பூசாரிபாளையம் பகுதி அருகே அச்சுறுத்தும் நிலையில் உள்ள பெண்கள் கழிப்பிடத்தை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை, பூசாரிபாளையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது, ஆனால் போதிய மறைப்புகள் இல்லாததாலும், அதை ஒட்டியே ஆண்கள் கழிப்பிடம் கட்டப்பட்ட வருவதால் பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தகரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தின் மீது வேளாண் பல்கலை கழகத்தை ஒட்டியுள்ள மரம் உடைந்து விழுந்துள்ளது, அதுவும் இது வரை அகற்றபடவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 

அதேபோல் அப்பகுதி அருகே மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள பொதுகழிப்பிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சில நபர்கள் பத்து வயது சிறுவனை கழிப்பிடத்திற்கு பின்னால் அழைத்து சென்று கட்டி போட்டு சராமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் போதிய பாதுக்காப்பு இல்லாத நிலையில் கழிப்பிடங்கள் உள்ளதால் அப்பகுதி பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...