ஒடிசா மருத்துவமனை தீ விபத்து எதிரொலி : சுகாதாரத்துறை அமைச்சர் நாயக் ராஜினாமா

ஒடிசாவில் பிரபல தனியார் மருத்துவமனையில் 25 பேர் உடல் கருகி பலியானதை அடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை நேரிட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நாயக்கை கண்டித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை முதலமைச்சர் நவீன்பட் நாயக்கிற்கு நாயக் அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ள பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. நாயக் தார்மீக அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் தீ விபத்து நிகழ்ந்த மருத்துவமனைக்கு தகுதியை மீறி அவரது மனைவி மூலம் நாயக் சலுகைகளை வழங்கியதே விபத்துக்கு காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் கல்வி நிறுவனம் ஒன்றில் நாயக்கின் மனைவி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...