ஐஏஎஸ் அகாடமி தீ விபத்தில் பாதித்த மாணவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர்

கோயம்புத்தூர், காந்திப்பார்கில் உள்ள கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி வளாகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் திடீர் என ஏற்பட்ட நச்சுப்புகையினால் அங்கு படித்துக்கொண்டிருந்த காயத்ரி, அரங்கநாதன், விஜயலட்சுமி, முத்துமணிகண்டராஜா, கிரிராஜன் ஆகிய மாணவர்களுக்கு  திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்விபத்தில் சக்திவேல் என்ற மாணவன் மருத்துமனை அழைத்துசெல்லும் வழியிலேயே மரணமடைந்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே அர்ச்சுனன், மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்ஜோ, துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...