ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

மேற்கு ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவு கொண்டதாக பதிவாகியுள்ளது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதிக்குள்ளாகினர்.

இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டரில் அமைந்திருந்த வீடுகள் குலுங்கியதாகவும், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் ஏதும் இதுவரை ஏற்படவில்லை. என ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், வீடுகள் குலுங்கியதால் மக்கள் மிகுந்த பீதிக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

முன்னதாக, ஜப்பானில் கடந்த 2011, மார்ச் மாதம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வடகிழக்கு கடற்பகுதியில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையமும் பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு ஜப்பானின் குமமோட்டோ பகுதியில் 2 கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதையடுத்து 1.700 முறைக்கும் மேல் பின்னதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்களில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். பெருமளவில் சேதம் ஏற்பட்டது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...