மனைவியை கத்தியால் குத்திய கணவர் - போலீஸ் விசாரணை

கோவை, கோவில் மேடு பகுதி, ஜமீதர் வீதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி ஷேமலதா (37). இவர்களுக்கு இடையே கடந்த 12 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்று 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே, கடந்த 6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட கருத்துவேறுபாடின் காரணமாக தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை விஓசி நகர் பகுதியில் ஷேமலதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சக்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு ஷேமலதாவை கண்மூடித் தனமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தலைமறைவானார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷேமலதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல் துறையினர் தலைமறைவான சக்தியின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...