காவிரி விவகாரம்: கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதைக் கண்டித்தும் தமிழகத்தில் அதிமுக, பாஜக-வைத் தவிர பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் கடந்த சில நாட்களாக ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் வெள்ளியன்று (இன்று) கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





இதுகுறித்து, போராட்டத்தில் பங்கேற்ற வீரத்தமிழர் முன்னணியின் மண்டல பொருளாளர் அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்திற்கு காவிரி நீரை விடக்கூடாது என்பதில் கர்நாடக அரசை விட மத்திய பாஜக அரசு மும்முரமாக உள்ளது. கடந்த 2007ல் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவிட அனுமதியில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. நடுநிலையாக செயல்படுவதாகக் கூறி உறுதிமொழியேற்ற மத்திய அமைச்சர்கள் தற்போது கர்நாடகம் பக்கம் சாய்ந்து விட்டனர். 





உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு அலுவலகங்களை பூட்டு போட்டும், வரி கொடுக்காத போராட்டமும் நடத்துவோம்'' என்று அவர் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 54 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.





Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...