தொடர்சிகிச்சைக்குப் பின் வனத்திற்குள் சென்ற பெண் யானை

பெரிய தடாகம் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை வனத்துறையினரின் சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

கோவை மாவட்டம் பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த யானைக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து பாரி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதனிடையே, அப்பகுதியில் 4 காட்டு யானைகள் வந்ததால், சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, இரண்டாவது நாளாக யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து தண்ணீரும், பழங்களையும் வழங்கி வந்தனர். 

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப்பின் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அந்த பெண் யானையை நிற்க வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் எழுந்து நின்ற யானை மீண்டும் வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...