பஞ்சப்படி வழங்க வேண்டும் என துப்புறவு மற்றும் சுமைத்தூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கோவையில் உள்ள நுகர்வோர் வாணிப கழகத்தில் பணியாற்றும் சுமைத்தூக்கும் பணியாளர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அரிசு நுகர்வோர் வாணிப கழகம் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் மொத்தம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது, அதே போல் குறைந்தபட்ச கூலி சட்டத்தை நடைமுறை படுத்தியது. ஆனால் இது வரை அவர்களுக்கான பஞ்சப்படி, குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பதில்லை, அதே போல் கிடங்குகளுக்கு அனுப்பும் பொருட்களின் அளவுகளில் அதிகாரிகள் குளறுபடி செய்வதால் கோவை மாவட்டம் பூசாரி பாளையத்தில் உள்ள நான்கு யூனிட்டுகளுக்கும் சரியான அளவில் பொருட்கள் செல்வதில்லை இதனால் சுமை தூக்கும் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கபடுவதாக கோவை மாவட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதே போல் இங்கு பணியாற்றும் துப்புறவு பணியாளர்களுக்கும் மாதம் 100 ரூபாய் மட்டும் பஞ்சப்படி வழங்கப்படுகிறது. மாத ஊதியமும் 30 ஆண்டுகளாக பணியாற்றிவருபர்களுக்கும் 1500 ரூபாய் அளவிற்கே ஊதியம் வாங்கி வரும் அவலம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக இவர்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூசாரி பாளையம் பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிப கழகத்தில் உள்ள சுமைத்தூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அரசு இதே மெத்தனப்போக்கை கடைப்பிடித்தால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். குறிப்பாக இன்று நாள் முழுவதும் ரேசன் கடைகளுக்கு முறையாக பொருட்கள் அனுப்பப்படவில்லை ஆனால் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் இது குறித்து கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.    

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...