கத்தியைக் காட்டி செல்போன் திருட்டு - ஒருவர் கைது

பீளமேடு பகுதியில் வீட்டில் புகுந்து கத்தியைக்காட்டி மிரட்டி செல் போன் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மேத்திவ். இவரது மகன் ஜஸ்டின் (19). கடந்த செவ்வாயன்று முகவரி விசாரிப்பதுபோல் இவரது வீட்டிற்கு வந்த மூன்று வாலிபர்கள் ஜஸ்டின் தனியாக இருந்ததை அறிந்து கத்தியைக் காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, வீட்டில் இருந்த 3 செல்போன்களை அந்த வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கோவை என்.எச். சாலை பகுதியைச் சேர்ந்த ரத்துல், ரோஷன், குட்டி ஆகிய மூவரும் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, ரோஷனை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ரத்துல் மற்றும் குட்டியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...