பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்


கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட அனைத்து ஜாமத்களின் ஒருங்கிணைபாளர் இனாயத்துல்லாஹ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்:-

பாஜக அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்டம் என்பது, முஸ்லீம்களின் தனி நபர் சட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும், அவரது மத நெறிகளை பின்பற்றி வாழ உரிமை உண்டு, அதன்படி, முஸ்லீம்களுக்கு சரியத்து சட்டம் உள்ளது. இந்த சட்டமானது குர்-ஆனின் நெறிகளுக்கும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டது. தற்போது கொண்டுவரும் பொது சிவில் சட்டத்தால் முஸ்லீம்களின் கலாச்சாரம் மற்றும் நெறிகள் முடக்கப்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் படி, முஸ்லீம்கள் அனைவரும் பொது சிவில் சட்டத்தை எதிர்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாளை கைய்யெழுத்து இயக்கத்தை கோவை மாவட்டம் முழுவதும் நடத்த தீர்மானித்துள்ளோம். அனைவரும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள 135 மசூதிகளிலும் நாளை கையெழுத்து இயக்கம் தொடங்குகிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...