பிஎன்ஐ சேம்பியன்ஸ் 150வது வார சந்திப்பு விழா


பிஎன்ஐ சேம்பியன்ஸ் சார்பில் தொழிலதிபர்களுடனான 150வது வார சந்திப்பு நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. 



இந்த சந்திப்பில் 55க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் மூலம் இதுவரை ரூபாய் 100 கோடி தொழில் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பின் போது அவர்கள், தங்களை பற்றியும், தொழில் முறைகள் குறித்தும் தகவல்கள்களை பரிமாற்றிக் கொண்டனர். 



இதனைத்தொடர்ந்து, பி.என்.ஐ-யின் கோவை தலைவர் ராம் பிரசாத் நம்மிடம் கூறியதாவது:- 

''கோவையில் உள்ள பல்வேறு தொழில் முனைவோர்கள் இதில் கலந்து கொண்டனர். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் எங்களது சந்திப்பு நடைபெறுகிறது. அதன்படி இன்று 150வது சந்திப்பு நடந்துள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோர் எங்களுடன் இணைந்தனர். இந்த அமைப்பு, தொழில் முனைவோர்களுடனான தகவல் மற்றும் தொழில் பறிமாற்றத்திற்கு மிகவும் உதவியானது'' என்று கூறினார். 



இவ்விழாவில், பி.என்.ஐ உருப்பினர்கள், தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...