மாணவர்களுக்கு பாஸ்போர்ட் பற்றிய விழிப்புணர்வு முகாம்

கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்லூரியில் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1000த்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையப் பற்றி தெரிந்து கொண்டனர். 

இது குறித்து கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் கூறியதில்:-

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையப் பற்றி கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள இம்முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையைப் பற்றி உரிய ஆவணங்கள் வைத்து, ஆன்லைன் மூலம் கற்பித்துக் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் முகாமில் ஆர்வம் காட்டியபோது அவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை பற்றி அவர்கள் மனதில் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மிக விரைவில் மாணவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும், இது குறித்து செயல்முறை பற்றிய தகவல் மேலும் அறியவும் பாஸ்போர்ட் அலுவலகம் வந்து பயனடையலாம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...