பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழா- சி.சி.எல் டி.20.


"எர்த் 2 மார்ஸ்" என்ற தனியார் நிறுவனம் தமிழக அளவில், கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளது.

தமிழகம் முழுவதுமாக மொத்தம் 8 மண்டலங்களில் இருந்து 16 கல்லூரி அணிகள் 'சி.சி.எல். டி.20' விளையாட்டுப்போட்டியில் விளையாட உள்ளன. இதன் முதற்கட்டமாக, கோவை மண்டலத்தை சேர்ந்த 34 கல்லூரிகள் தங்கள் அணிகளை போட்டிக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இருந்து 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த தகுதிச்சுற்று போட்டி வரும் நவம்பர் மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளது.

கோவை மண்டலத்திற்கான போட்டிகள் பி.எஸ்.ஜி கலை கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி சாலையில் உள்ள ரேடியோ மெர்ச்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இதில், ரேடியோ மெர்ச்சி பண்பலையின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அஜித் கிருஷ்ணா, சிம்ப்ளிசிட்டி செயலியின் முதன்மை தலைமை அதிகாரி ஆண்ட்ரு சாம் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.





தொடந்து பி.எஸ்.ஜி. கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் இது குறித்து கூறுகையில், 'எங்கள் போன்ற மாணவர்களுக்கு, இது ஒரு சிறந்த அடித்தளம். இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளோம். கல்லூரியில் நடக்கும் தேர்வு பாதிக்காத வகையில் போட்டிகளை நடத்த உள்ளது மிகுந்த மகழ்ச்சியாக உள்ளது' என்றார்.



"சி.சி.எல். டி.20" போட்டியில் உங்கள் கல்லூரி கிரிக்கெட் அணியை இணைத்துக்கொள்ள: 9629441991 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...